மாயமாகும் பயணப்பொதிகள்: கட்டுநாயக்க விமானநிலையத்தில் மர்மம்!

Saturday, April 28th, 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் சுமார் 75 பயணப் பொதிகள் காணாமல் போயுள்ளன.

குறித்த விமான நிலையத்தின் மூலம் நாட்டுக்கு வரும் பயணிகளின் பயணப் பொதிகள் காணாமல் போனமை தொடர்பில் 75 முறைப்பாடுகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 25ஆம் திகதி காணாமல் போன பயணப் பொதி ஒன்றை சீ.சீ.ரீ.வி கமரா மூலம் எடுத்துச் சென்றவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ பயணப் பொதிகள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பயணப்பொதிகளை களவாக எடுத்துச் சென்றமை குறித்து சிலருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை முதலாம் வகுப்பில் 31 பேருக்கு பதவி உயர்வு  : 7 பேர் தமிழ், முஸ்லி...
தேயிலை, நெல், சோள செய்கையாளர்களுக்கு யூரியா பசளையை பகிர்ந்தளிக்க நடவடிக்கை - பெருந்தோட்ட கைத்தொழில் ...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெரமுனவின் சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்...