சாவகச்சேரி வெடிபொருள் மீட்பு: மேலும் ஐவர் கைது
Friday, April 8th, 2016அண்மையில் சாவகச்சேரி மறவன்புலவு பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேகநபரின் அலைபேசியிலிருந்து உள்வந்த மற்றும் வெளிச்சென்ற அழைப்புகளின் ஊடாக மிகநெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், நெல்லியடி மற்றும் சாவக்கச்சேரி ஆகிய இடங்களை வதிவிடமாக கொண்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மாணவன் ஜதுர்சாயன் அகில இலங்கையில் சாதனை!
சோளம், உருளைக்கிழங்கு, தேயிலைக்கு யூரியா விநியோகம் - 15 ஆயிரம் ரூபாவுக்கு வழங்கவும் தீர்மானம் என விவ...
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!
|
|