தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் 03 தினங்களுக்கு வரையறை!
Tuesday, May 7th, 2019
ஆண்டுதோறும் நடத்தப்படும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை இம்முறை மூன்று தினங்களுக்கு வரையறுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக டெங்கு ஒழிப்பு விஷேட செயலணியின் பணிப்பாளர் விஷேட வைத்தியர் அஸித திசேரா தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக இம்முறை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இம்மாதம் 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் 18 மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் நிலைமையால் இம்முறை முப்படை, பொலிஸார் மற்றும் சிவில் சேவை படையணி ஆகியோரை இதில் ஈடுபடுத்த முடியாததன் காரணமாக அவர்களுக்கு பதிலாக சுகாதார துறையை சேர்ந்த அதிகாரிகள் சர்வோதய மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
Related posts:
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் விரைவில் புதிய சட்டம்!
இன்று இந்தியாவின் 70வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கோலாகலம்!
நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு!
|
|
|
எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது – ஜ...
இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக அணிதிரளுங்கள் - சர்வதேச நாடுகளிடம் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை...
வெகு சிறப்பாக நடைபெற்ற யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் விளையாட்டு அரங்கு திறப்புவிழா! .


