சாரதியின் அசமந்த போக்கு – மாங்குளம் – பனிச்சம்குளம் பகுதியில் கோர விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Tuesday, August 15th, 2023

ஏ-9 பிரதான வீதியின் மாங்குளம் – பனிச்சம்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் ஒன்று, வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி ஒன்றில் மோதுண்டதுடன், குறித்த பாரவூர்தி அதன் முன்னால் இருந்த மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பாரவூர்திக்கு பின்னால் நின்றிருந்த ஒருவரும் வானில் பயணித்த இருவரும் காயமடைந்த நிலையில், மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குறித்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம், 3 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம், வெல்லம்பிட்டி மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: