சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை கோரிய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச!

Tuesday, March 29th, 2022

இலங்கையின், மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களுக்கு சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் – USAID – மூலம் கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க தூதுவர் திருமதி ஜூலி சங் (Julie Chung) தெரிவித்துள்ளார்.

ஜூலி சங் அவர்கள, ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்து ஜனாதிபதியை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார்..

அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் வெளிவிவகார அமைச்சர் திருமதி விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது அரசாங்கம் அவருக்கு வழங்கிய ஒத்துழைப்பையும் தூதுவர் பாராட்டினார்.

இதன்போது அண்மைக்காலமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கான காரணங்களை வெளிவிவகார அமைச்சருக்கு ஜனாதிபதி  விளக்கியதுடன், சர்வதேச நாணய நிதியத்தை நாம் அணுகும் விடயத்தில் அமெரிக்காவின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதனையும் தெரிவித்துள்ளார்..

சர்வதேச நாணய நிதியத்திற்குச் செல்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தைப் பாராட்டிய திருமதி ஜூலி சங் இது ஒரு நீண்டகால அடிப்படையில் நாட்டுக்கு முக்கியமான ஒன்றாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை எந்தவித பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், குறைந்த வருமானம் பெறுவோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனையும் அமெரிக்க தூதுவரிடம் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: