ஐந்து மாதங்களின் பின்னர் வழமைக்கு திரும்பியது பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, September 2nd, 2020

நாட்டை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டும் மட்டுப்படுத்தப்பட்ட வகையிலும் இருருந்துவந்த பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமைமுதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய தரம் 6 முதல் 13ஆம் தரம் வரையான மாணவர்களுக்கான பாடசாலைகள் இன்றுமுதல் வழமைபோன்று காலை 7.30 மணி முதல் 1.30 மணி வரையில் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம், முதலாம் தரம்முதல் ஐந்தாம் தரம் வரையான மாணவர்களுக்கு செப்டெம்பர் 8ஆம் திகதிமுதல் கற்றல் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதிமுதல் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 11 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட்டன.

அதேநேரம் பாடவேளைகளின் நேரங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதற்கமைய, தரம் 10-13 ஆகிய வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தினமும் காலை 07.30 மணிமுதல் பிற்பகல் 3.30 மணிவரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: