சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வருகை!
Monday, June 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் இலங்கைக்கு வரவுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருவதுடன் ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ்.பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரண வழக்கில் கணவன் கைது!
மன்னார் மடு திருத்தல பெருவிழா ஆரம்பம்!
மின்சார வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு மக்களுக்கு ஊக்கமளிக்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக...
|
|
|


