யாழ்.பல்கலைக்கழக இணைமருத்துவபீட மாணவி மரண வழக்கில் கணவன் கைது!

Sunday, September 18th, 2016

யாழ். பல்கலை விஞ்ஞான பீட மாணவியொருவரின் மரணம் தொடர்பாக இரத்தினபுரி வைத்தியசாலையில் கடமை புரிந்து வந்த வைத்தியர் ஞானகணேஸ் ரஜித் கைது செய்யப்பட்டுள்ளர்.

கிளிநொச்சி பகுதியை சேர்ந்த குறித்த வைத்தியரும் மரணமடைந்த இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவரும் கடந்த வருடம் திருநெல்வேலி பகுதியில் வீடொன்றில் இருந்தபோது குறித்த பெண் தீப்பற்றி எரிந்த நிலையில் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாகவே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இணை மருத்துவப்பிரிவு மாணவியான லோறன்ஸ் அனா எப்சிபா என்பவர் கடந்த 06/07/2015 அன்று தீக்காயங்களுக்குள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின் மரணமடைந்தார்

இம்மாணவியின் மரணம் தொடர்பில் உடுத்துறையைச் சேர்ந்த மருத்துவத்துறை விரிவுரையாளர் DR. ஞானகணேஸ் ரஜித் (ஜெனா) என்பவர் மீது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களால் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

0003

Related posts: