சமூக வலைத் தளங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்!

Tuesday, May 28th, 2019

சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் செலுத்துமாறு பொலிசார் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பழைய சம்பவங்களை சமகாலத்தில் நிகழ்ந்தவையாக சித்தரிக்கும் வகையில் சேர்த்துள்ள பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.

இனங்களுக்கு இடையில் பகையையும் குரோதத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த விடயத்தில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts: