இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு – தமிழ் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை!

Thursday, February 2nd, 2023

தமிழ் அரசியல் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், விடுதலை செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பான மேலதிக தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Related posts: