சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது – 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பு!

இலங்கையில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு சுகாதார அமைச்சு அவசர அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி, 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான தகவல்களை உள்ளடக்குமாறு கோரி சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரம் போலியானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் டொக்டர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், குறித்த போலி விண்ணப்பப் பத்திரமானது சுகாதார அமைச்சினாலோ அல்லது சுகாதார அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களினாலோ வெளியிடப்படவில்லை.
எனவே இணையத்தளத்தில் பகிரப்படும் விண்ணப்பப்பத்திரத்தை நிரப்ப வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன - பங்காளதேஷ் உயர்ஸ்தானிகரிடையே விசேட சந்திப்பு – தொழில்நுட்பத்தை ...
ரஷ்ய வழங்கிய கடனை எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்த இலங்கை நடவட...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்...
|
|