சமுர்த்தி பரீட்சை நடத்துவதில் சிக்கல்!
Saturday, September 17th, 2016
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.
குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும் குழுவினருக்கு இடையில் இடம்பெற்றுள்ளது.
Related posts:
கடந்த கால தவறுகளை ஆராய்ந்து அதன் பெறுபெறுகளை ஆதாரமாக கொண்டு இனிவருங்காலத்தை வெற்றிகொள்ள ஒன்றுபட்டு உ...
இலங்கையின் நிலைமையை வழிநடத்துவதற்கு உதவுவதில் சாதகமான பங்கை வகிப்பதாக சீனா அறிவிப்பு!
சுற்றுலாத்துறையில் புதிய மாற்றத்துடன் முன்னோக்கிச் செல்ல எதிர்பார்ப்பு - ஒத்துழைப்போருக்கு உதவிகளை ...
|
|