நல்லிணக்க பொறிமுறை செயலகத்திற்கு செயலூக்கம் வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
Thursday, August 25th, 2016நல்லிணக்க பொறிமுறை செயலகத்தை செயலூக்கப்படுத்த அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சமர்ப்பித்த இது தொடர்பான யோசனைக்கு நேற்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த செயலகம், நல்லிணக்கம் தொடர்பான கொள்கை வகுத்தல், நடைமுறைப்படுத்தல் போன்ற பணிகளின் நிமித்தம் செயற்படவுள்ளது
இந்தநிலையில் இந்த பொறிமுறை செயலகத்துக்கு நிதி மற்றும் ஆளனிகளை அதிகமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்துள்ளது.
இந்த செயலகத்தின் செயலாளர் நாயகமாக மனோ தித்ததவெல கடமையாற்றுகிறார். இதேவேளை இந்த செயலத்தின் கீழ், உண்மையை கண்டறியும் குழு, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் என்பனவும் இயங்கவுள்ளன.
Related posts:
நாளை மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகின்றது ஆனையிறவு புகையிரத நிலையம்!
கடும் வறட்சி - யாழில் 7311 குடும்பங்கள் பாதிப்பு!
இரண்டாவது தடுப்பூசியை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் 3 ஆம் திகதி சந்தர்ப்பம் – தவறாது பெற்றுக்கொள்ளு...
|
|