சட்டவிரோத மணல் அகழ்வு; தர்மபுரத்தில் ஐவருடன் உழவு இயந்திரங்களும் பறிமுதல்!
Wednesday, January 26th, 2022கிளிநொச்சி – கல்மடு குளம் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 5 உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடு குளம் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதாக இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது.
இதற்கமைய, இராணுவத்தினரின் உதவியுடன் பொலிஸார் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவரை கைதுசெய்துள்ளதுடன் மணல் அகழ்விற்கு பயன்படுத்திய 5 உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சீன ஜனாதிபதிக்கு பிரதமர் வாழ்த்து!
260 கைதிகளின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த ...
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...
|
|