சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் 78 கோடி ரூபா பெறுதியான சொத்துக்கள் முடக்கம்: 1,100 பேர் தொடர்பில் விசாரணை – சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவிப்பு!

Sunday, March 6th, 2022

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிரேஷ்ட காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்..

மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த விசாரணை பிரிவினால் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பணமோசடி சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

சொத்துகள் மற்றும் நிதி உள்ளிட்ட துறைகளில் விசாரணைகளை மேற்கொண்டு சிறந்த அனுபவமிக்க அதிகாரிகளுடன் இந்த விசாரணை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

குற்றச்செயல்களில் ஈடுபட்டு பெறப்படுகின்ற பணத்தின் ஊடாக ஈட்டப்படும் சொத்துக்களுக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனடிப்படையில் இதுவரையில் 1,100 பேர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அவற்றில் 325 பேர் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் சிரேஷ்ட காவல்துறை பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: