சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்ரெம்பர் இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, September 3rd, 2023

சினோபெக் எரிபொருள் நிறுவனம் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நாடளாவிய ரீதியில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளின் முன்னேற்றம், வர்த்தகர்களுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல், வர்த்தக முத்திரை மற்றும் நாடளாவிய செயல்பாடுகளை தொடங்குதல் தொடர்பாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் சினோபெக் எரிபொருள் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளின் அதிகாரிகளுடன் இன்று (03) கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவதற்கான உறுதிப்பாட்டை சினோபெக் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் காலக்கெடுவிற்கு முன்னர் முன்மொழிவுக்கான கோரிக்கையை (RFP) சமர்ப்பிப்பதாகவும் டுவீட் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: