சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற மன்னாரில் 20 பேர் கைது !
Thursday, April 8th, 2021சட்டவிரோதமாக நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முயற்சித்த 20 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் – சிலாவத்துறை – கொண்டச்சிக்குடா பகுதியில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 04 பெண்களும் 14 ஆண்களும் 13 வயதுடைய சிறுமி ஒருவரும் 16 வயது சிறுவனும் அடங்குவதாகவும் 04 முச்சக்கர வண்டிகளில் இவர்கள் கடற்கரைக்கு சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வாழைச்சேனை, வத்தளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
80 வீதமான பாடசாலை மாணவர்கள் போஷாக்கு உணவை உட்கொள்வதில்லை!
சில சேவைகள் வழமைக்கு திரும்ப 6 மாதங்கள் செல்லும் - அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!
|
|