தொலைபேசி திருட்டில் ஈடுபட்ட இருவர் யாழ்ப்பாணப் பொலிசாரால் கைது!

Wednesday, June 28th, 2023

யாழில் தொலை பேசி திருட்டில்ஈடுபட்ட இருவர் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்ட  தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது

தொலைபேசி பறிகொடுத்தவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள்  யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டுயாழ்ப்பாணபொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டுள்ளனர்

நேற்றுமுன்தினம் பரமேஸ்வராசந்தியில் கடையொன்றில் போன் திருட்டு இடம்பெற்றது

சிசிடிவி கமரா உதவியுடன் சந்தேகநபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்தனர் அவரிடம் போன் எதுவும் கிடைக்கவில்லை தெரியாத நபர் ஒருவருக்கு போனை 10000/=ரூபாவிற்கு விற்றுள்ளார் இன்று தொலைபேசி திருத்து மிடத்திற்கு குறித்த சந்தேக நபர் தொலைபேசியுடன் வந்த பொழுது யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர், கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தின் முட்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: