நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் – ஒத்திவைப்பு விவாதம் இன்று!

Wednesday, July 5th, 2023

நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெற்றது.

அதன்படி நாடாளுமன்றம் இன்றுமுதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கூடும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 30 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று மு.ப. 09.30 மணிக்குப் நாடாளுமன்றம் கூடிய நிலையில் காலை 10.30 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் நடைபெற்றது

அத்துடன் மு.ப. 10.30 மணிக்கு பல்வேறு நியதிச்சட்ட நிறுவனங்களின் ஆண்டறிக்கைகள் தொடர்பான எட்டு பிரேரணைகள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய நீதிமன்றங்களில் நீதி விசாரணைகளில் தாமதம் மற்றும் அதற்கான காரணங்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறது.

நாளையதினம் மு.ப. 09.30 மணி முதல் பி.ப. 05.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் இரண்டாவது நாளாகவும் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, பி.ப. 05.00 மணி முதல் 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வானூர்தி மூலம் ஏற்றிச்செல்லல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அதனையடுத்து, பி.ப. 05.00 மணி முதல் பி.ப. 05.30 மணி வரை எதிரிக்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts: