க.பொ.த பரீட்சையில் மாற்றம் !

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் இனிவரும் காலங்களில் நடைமுறையிலுள்ள ஒன்பது பாடங்களை பல மாற்றங்களுடன் குறைத்து, தகவல் தொழில்நுட்பத்தினை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்தெரிவித்துள்ளார்.
பின்லாந்து நாட்டில் உலகின் வெற்றிகரமான கல்வி முறை காணப்படுவதாகவும், நடைமுறை மற்றும் தொழிற்துறை கல்வியே அங்குநடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பின்லாந்து நாட்டைப் போல, குறித்த நடைமுறைக்கு முன்னுரிமை கொடுத்து மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ள கல்வித்திட்டம் மூலம், நாட்டின் மாணவர்களதுஎதிர்காலத்தைச் சிறந்த முறையில் வலுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Related posts:
அரசடி வீதிக்கு ஒளிகொடுத்த ஈ.பி.டி.பி!
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் உள்ள பகுதிகளில் மருந்துகளை விநியோகிக்க விசேட தபால் சேவை - பிரதி தபால...
ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்...
|
|