கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்!
Thursday, November 3rd, 2016
சர்ச்சைக்குரிய கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு ஒருபோதும் இணங்கப்போவதில்லை என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அடிக்குறிப்புகள் தொடர்பான தமது சிந்தனையினூடாக எவ்வித மாற்றமும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு கணக்காய்வாளர் நாயகம் இணக்கம் தெரிவித்துள்ளார் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் இந்த அறிக்கையின் பல விடயங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தெளிவுப்படுத்தல்களும் வழங்கப்படவில்லை எனவும் கணக்காய்வாளர்நாயகம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இதற்கு தாம் இணக்கம் தெரிவிக்காத போதிலும், என்னுடைய இணக்கப்பாடும் கிடைத்துள்ளதாகவும் கோப் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
தீர்மானங்கள் இவ்வாரம் அறிவிக்கப்படும் : அமைச்சர் ராஜித தெரிவிப்பு!
கொரோனா அச்சுறுத்தல்: பாடசாலை அதிபர்களுக்கு அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!
|
|