கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்தது!

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் 27 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவைளை 41 முதல் 93 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணங்களே அதிகளவில் இவ்வாறு பதிவாகியுள்ளன.
இறுதியாக பதிவான 27 மரணங்களில், பெரும்பாலானவை கொவிட் நியூமோனியாவினால் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வேலையற்ற பட்டதாரி மீது வாள்வெட்டு தாக்குதல்!
வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சட்டங்கள் தயாரிப்பதை துரிதப்படுத்துங்கள் - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ...
|
|