கொவிட் – 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் – இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

கோவிட் 19 தடுப்பூசிவழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 09 ஆம், 10 ஆம்,11 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என வடக்க மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள் செய்திக் குறிப்பில் –

குறித்த தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாகசு காதாரவைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்படும். பொதுமக்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும் போதுமுதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காகசு காதாரவைத்திய அதிகாரிபணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் ,மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலைமை உடையவர்களுக்கும் அவசரசிகிச்சைப் பிரிவுகள் உள்ளயாழ் போதனா வைத்தியசாலை மற்றும் சாவகச்சேரி, தெல்லிப்பளை, ஊர்காவற்துறை, பருத்தித்துறை போன்ற ஆதார வைத்தியசாலைகளில் முதல் தடவை வழங்கப்பட்டதனை போன்றே ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதிசனிக்கிழமை இரண்டாவது தடுப்பூசிகளினை பெற்றுக் கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்குவதற்காக பிரத்தியேகமாக தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.000

Related posts: