கொரோனா வைரஸ்: சந்தேகிக்கப்பட்ட 311 இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்!
Tuesday, March 24th, 2020இலங்கையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 311 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
பொலநறுவை கந்தக்காடு தனிமைப்படுத்தும் முகாமில் இருந்து 108 பேருக்கும், மட்டக்களப்பு புணானி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து 203 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்து 311 பேரும் இன்று பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கண்டி, மாத்தறை, காலி ஆகிய மாவடங்களை சேர்ந்தவர்கள் இன்று எட்டு பேருந்துகளில் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூவாயிரத்திற்கும் அதிகமானனோர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
Related posts:
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை இம்மாதத்துடன் நிறைவு!
வேலை செய்யும் மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி செயற்படுவது அனைவருக்கும் நன்மை...
சிறுமியைத் தாக்கிய வளர்ப்புத் தாய்க்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!
|
|