கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு – இலங்கையின் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 1643 ஆக உயர்வு!
Tuesday, June 2nd, 2020இலங்கையில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடமன் குறித்த 4 பேரும் பங்களாதேஷில் இருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்..இதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1643 ஆக அதிகரித்துள்ளது
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 811 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை நாட்டில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 821 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைவில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் - அமைச்சர் ராஜித!
பதவி வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கவில்லை - அமைச்சர் ரம...
|
|