கொரோனா தொற்று: இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது!

Saturday, April 11th, 2020

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவின்படி கொரோனா வைரஸில் இருந்து உலகளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சத்தை  தாண்டியுள்ளது.

அத்துடன் 1.6 மில்லியன் வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் 368,000 க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இத்தாலி இதுவரை அதிக எண்ணிக்கையிலான கொரோனா இறப்புகளை பதிவு செய்துள்ளது, நேற்றையதின நிலவரப்படி 18,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

அத்தோடு அமெரிக்கா உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுநோய்களில் பெரும்பாலானவை, கிட்டத்தட்ட அரை மில்லியன் என்று அறிவித்துள்ளது.

தடுப்பூசியோ, மருந்தோ அற்ற நிலையில் தொடரும் அதிதீவிர தொற்றினால் வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் செய்வதறியாது தவித்துவருகின்றன.

Related posts: