இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு பச்சை அனகொண்டாக்கள்!

Friday, May 4th, 2018

இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகொண்டாக்கள்அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்திய பூங்கா அதிகார மையத்தின் அனுமதியுடன் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகம்தெரிவித்துள்ளது.

இவற்றின் சுகாதார நிலைமைகள் நல்லமுறையில் உள்ளதாகவும், அவை விலங்கியல் பூங்காவில் தனிமையான இடத்தில் உள்ளதாகவும் பூங்காவின் இயக்குநர் சி. ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த அனகொண்டாக்கள் 6 முதல் 8 அடி நீளமும், 15 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.

இதேநேரம் மைசூர் விலங்கியல் பூங்காவிலிருந்து நான்கு அரியவகை மான்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த விலங்குப் பரிமாற்றம் ஆறு ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்றுள்ளது.

Related posts:

கொழும்பில் பதற்றம் - மேல் மாகாணம் முழுவதும் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறையில்!
இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் டொலரின் பெறுமதி மேலும் அதிகரிக்கும் -உணவுப்பொருள் இறக்குமத...
வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 100 க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன - ரயில்வே திணைக...

வதந்திகளை நம்பி அச்சமடைய வேண்டாம் -, பெற்றோரிடம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் முக்கிய கோரிக்கை!
ஒமிக்ரோன் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பூஸ்டர் தடுப்பூசி அவசியம் - ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்...
வெளிப்புற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 58 சிறைக்கைதிகள் காணாமல்போயுள்ளனர் - தகவல்களை தெ...