கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக உயர்வு!
Monday, June 14th, 2021கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் இரண்டாயிரத்து 361 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதேநெரம் குறித்த தொற்றாளர்களில் 2 ஆயிரத்து 31 பேர் குணமடைந்து நேற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள சுகாதார அமைச்சு இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளான 32 ஆயிரத்து 955 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றன நிலையில் 2 ஆயிரத்து 136 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த தீர்மானம்!
அமெரிக்க தூதுவரை சந்தித்தார் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ!
அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் - ...
|
|