மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் – புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் தெரிவிப்பு!
Saturday, January 1st, 2022மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் இன்றுமுதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு வருகைதந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதேநேரம் நாடளாவிய ரீதியிலுள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியக தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
1 கோடியே 17 லட்சம் ரூபா பணத்தினை வாங்கியவர்கள் ஏமாற்றியதனால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய் மற்றும...
அபராதத் தொகை அதிகரிப்பு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!
13 ஆவது திருத்தமே அரசியல் தீர்வுக்கு வழி: பாரதப் பிரதமரிடம் வலியுறுத்தியது தமிழ் தேசிய கூட்டமைப்பு!
|
|