கொரோனா அச்சுறுத்தல் : 12 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!
Thursday, August 5th, 2021இலங்கையில் கொரோனா தொற்றுநோயால் 12,ஆயிரம் பேர் மட்டுமே வேலை இழந்துள்ளனர் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த தொற்றுநோயால் நூறாயிரக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர் என்ற குற்றச்சாட்டு தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய குறைந்தபட்ச ஊதிய திருத்தம் மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் குடிமக்களின் வேலைவாய்ப்புகளில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து தொழிலாளர் அமைச்சகம் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியது. இதன் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரி - புடின் கலந்துரையாடல்!
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடைய...
அடுத்த வாரம் இந்தியாவை சூழவுள்ள பெரும் ஆபத்து - மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எச்சரிக்கை!
|
|