கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில் திங்கள்முதல் நாடுமுழுவதும் இறுக்கமான நடைமுறை – இராணுவத் தளபதி அறிவிப்பு!

Saturday, May 1st, 2021

நாட்டில் கொரோனாத் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை மறுதினம்முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் இறுக்கமாக்கப்படவுள்ளதாக கொவிட் -19 செயலணியின் பிரதமானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறைந்தது அடுத்த இரு வாரங்களுக்கு இந்த இறுக்கமாக கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இன்று முதலாம் திகதி தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: