தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபா அறவிடப்படும் – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு!
Friday, August 27th, 2021
தொழிலுக்காக வெளிநாடு செல்லும் நபர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக 16 ஆயிரத்து 416 ரூபாவினை அறவிட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய மேலும் தெரிவிக்கையில் –
குறித்த கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளும் நபர்கள் தொழிலுக்காக வெளிநாடு செல்வதற்கு முன்னர் அவர் செல்லும் நாட்டிற்கு அமைய தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொழிலுக்காகதான் வெளிநாடு செல்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளாமல் தடுப்பூசி வேலைத்திட்டதில் இவர்களை இணைத்துக் கொள்ள முடியாது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது மேலாளர் மங்கள ரந்தெணிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!
கோழி முட்டையின் விலை சடுதியாக உயர்வு – பேக்கரி உரிமையாளர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
வடமாகாணத்தில் கண்புரை சத்திர சிகிச்சை முகாம்களை 3 கட்டங்களாக நடத்துவதற்கு ஏற்பாடு !
|
|
|
20 ஆம் திகதி புத்த பெருமான் பரிநிர்வாணம் அடைந்த புனித பூமிக்கு இலங்கையிலிருந்து முதல் விமானம்!
வலுவான மற்றும் நீடித்த மீட்சியை அடைவதற்குமான திட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் - அமெரிக்க திறைசே...
வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆ...


