கொட்டும் மழையிலும் 71வது சுதந்திர தினம் யாழில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டன.

Monday, February 4th, 2019

யாழ்.மாவட்ட செயலகமும், யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகமும் இணைந்து ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்.மாவட்ட செயலக முன்றலில் நேற்றுக் இன்று  (04) 8.15 மணியளவில் முப்படை மற்றும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.

காலை 8.45 மணியளவில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், 2 நிமிட மௌ அஞ்சலியும் இடம்பெற்றது. அதன்பின்னர், முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ஏற்றுக்கொண்டனர்.

சுங்கானை கலாசார மத்திய நிலைய மாணவிகளின் நடன நிகழ்வும் இடம்பெற்றதை தொடர்ந்து, யாழ்.மாவட்ட பாடசாலை மாணவர்களின் பாண்ட் இசை மற்றும், மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன், தமிழர் பாரம்பரிய நடன நிகழ்வான கோலாட்டம், மயிலாட்டம் என்பனவும், இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலக வளாகத்தில், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி தர்சன ஹெட்டியாராச்சி ஆகியோர் மரம் நாட்டி வைத்தனர்.

சுதந்திர தின நிகழ்வில், இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள், முப்படை அதிகாரிகள், யாழ்.மாவட்ட செயலக அதிகாரிகள், மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts: