எல்லைத்தாண்டி மீன்பிடித்த 43 இந்திய மீனவர்கள் கைது!

Sunday, December 19th, 2021

யாழ்ப்பாணம் – நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 43 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த  கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 6 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்ததன் பின்னர் காங்கேசன்துறை இடைத்தங்கல் முகாமுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: