கைச்சாத்தானது திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம்!

Friday, January 7th, 2022

திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி மற்றும் Trinco Petroleum Terminal தனியார் நிறுவனம் ஆகியன குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இதற்கமைய, 99 எண்ணெய் தாங்கிகளில் 85 எண்ணெய் தாங்கிகள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் தாங்கிகள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டுள்ளன.

Related posts: