கிளிநொச்சியில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சி!

Sunday, February 17th, 2019

கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களப் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது சுமார் நான்காயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த பதினாறாயிரத்து 801 வரையான மீனவர்கள் கடற்றொழிலை வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டில் மீன்பிடியில் வீழ்ச்சி நிலை காணப்படுகின்றது.

2018 ஆம் ஆண்டில் வாழ்வாதார நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மீனவர்களின் முதலீடுகளுக்காகவும் கிடைத்த மொத்த உற்பத்தி பத்தாயிரத்து 471 மெற்றிக்தொன் கடலுணவுகளாகும்.

ஆனால் 2017 ஆம் ஆண்டில் பதினொராயிரத்து 664 மெற்றிக்தொன் கடலுணவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2017 ஆம் ஆண்டுக்கும் 2018 ஆம் ஆண்டுக்குமிடையில் ஆயிரத்து 200 மெற்றிக்தொன் உற்பத்தி மாவட்டத்தில் குறைவாக கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக 2018 ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைதீவு கடற் பகுதியில் கடற்றொழில் செய்வதற்காகவும் அங்கு மக்கள் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழில் பரப்பைவிட 2018 ஆம் ஆண்டில் கூடுதலான பகுதியில் தொழில்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: