கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!
Tuesday, December 8th, 2020
புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடும் மழை மற்றும் புயல் காரணமாக குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசியலமைப்பு சபையின் கன்னி அர்வு இன்று!
கல்வியியல் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் இணைப்பு!
கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!
|
|
|


