காலநிலை சீர்கேட்டால் உயிரிழந்தவர் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 82ஆயிரத்து 924 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 3 லட்சத்து 62 ஆயிரத்து 374 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் 48 ஆயிரத்து 998 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதில் அரநாயக்கவில் கூடிய உயிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் 229 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு 2647 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கடலில் சேதமடையும் கடற்றொழில் வள்ளங்களுக்கு நிவாரணம்!
விஷம் கலந்த தேங்காய் எண்ணெய் விவகாரம் - வடக்கின் வர்த்தக நிலையங்கள் - சேமிப்பு கிடங்குகளில் அதிரடிச்...
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ள காலப்பகுதிகளில் பொதுப் போக்குவரத்து இடம்பெறாது - இராஜாங்க அமைச்சர...
|
|