காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது மக்கள் அதிருப்தி – ஜனாதிபதி!

Sunday, April 1st, 2018

காணி தொடர்பில் செயற்படும் நிறுவனங்கள் மீது பொது மக்கள் திருப்தி கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவை ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

குறிப்பிட்ட ஒரு சில காணிக்கு மூன்று உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட மோசடிகளும் இடம்பெற்றுள்ளன. இது போன்ற சம்பவம் ஒன்று பொலநறுவையில் இடம்பெற்றமை குறித்து தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts: