களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!

Sunday, February 13th, 2022

270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது.

அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கியும் நேற்று செயலிழந்தது.

இதன் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறுகிய கால மின் துண்டிப்பு எதிர்பார்க்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கி, நேற்றிரவு புனரமைக்கப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts:


வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நிதி நிறுவனங்களிடமிருந்து மக்கள் பெற்றுக்கொண்ட கடன்களை இர...
ஏமாற்று அரசியலுக்கு தமிழ் மக்கள் எடுபட மாட்டார்கள் - வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா...
அனைவரினது ஒத்துழைப்பும் இருந்தால் மக்களின் விருப்பங்களை திருப்திப்படுத்த முடியும் - ராஜாங்க அமைச்சர்...