கல்வித்துறையை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் -அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Thursday, January 12th, 2017

நாட்டின் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொட விஹாரமஹாதேவி கல்லூரியில் இன்று தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் தேசிய வைபவத்தில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார். அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் உள்ள ஆயிரத்திற்கும் அதிகமான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவிருக்கின்றன.மாணவர்களுக்கான காப்புறுதி முறைமையும் அமுலாகின்றது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

bd30a4f88068ed086cb6bf79f1cbce6f_XL

Related posts: