கத்தியால் குத்தி மூதாட்டி படுகொலை – மானிப்பாயில் சம்பவம்!
Thursday, June 28th, 2018பிச்சை எடுக்கச் சென்றவர் வீட்டில் இருந்த மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னர் சந்தேகத்தின் பேரில் 35 வயதுடைய நபர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் இன்று வியாழக்கிழமை 28 காலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி கந்தையா லீலாதேவி வயது 69 என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இந்த மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். இந்த மூதாட்டிக்கு சமையல் வேலை பார்ப்பதற்காக வயோதிப பெண் ஒருவரும் அந்த மூதாட்டியுடன் இருக்கின்றார்.
இன்று வியாழக்கிழமை காலை சுமார் 8 மணியளவில் பிச்சைக்காரன் ஒருவர் வீட்டிற்குச் சென்று பிச்சை கேட்டுள்ளார். அப்போது அந்த மூதாட்டி 100 பா காசு கொடுத்துள்ளார். அந்த காசினை வாங்கிக்கொண்டு போன பிச்சைக்காரன் 30 நிமிடங்களின் பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று மூதாட்டியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.
அந்த நேரம் சமையல் வேலை பார்ப்பதற்காக நின்றும் அந்த வயோதிப பெண் அந்த இடத்தில் நிற்கவில்லை. மீண்டும் மூதாட்டியை வந்து பார்த்த போது மூதாட்டி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இரத்தத்துடன் காணப்பட்டுள்ளார். பதறிய மற்றைய வயோதி பெண்இ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். அதன்போது மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தினைப் பார்வையிட்டதுடன் சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்போது பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட வவிசாரணையின் போது யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 35 வயதுடைய ஜெயனாந்தன் சுதர்சன் என்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும்; மானிப்பாய் பொலிஸார் தெரிவித்ததுடன் கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் சி.சி.ரி.வி பொருத்தப்பட்டுள்ளது. அந்த வீட்டின் சி.சி.ரி.வி காணொளிகளைப் பெறுவதற்கான நீதிமன்ற அனுமதிகளைப் பெறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் மானிப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|