கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம் – நாட்டின் தற்போதைய நிலைமைகள் தேரர்களுக்கு ஜனாதிபதி எடுத்துரைப்பு!

Sunday, June 27th, 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்து, மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தலதா மாளிகைக்கு நேற்றையதினம் விஜயம் செய்த ஜனாதிபதியை தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

இதன்பின்னர் மல்வத்தை மஹா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி, அந்த பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர்,அனுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரை  சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார்.

பின்னர், மல்வத்தை மஹா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அவர்கள், மல்வத்தை பீடத்தின் மஹாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து, நலன் விசாரித்தார். மஹாநாயக்க தேரர் அவர்கள், பிரித் பாராயணம் செய்து, ஜனாதிபதியை ஆசிர்வதித்தார்.

இதேவேளை மல்வத்தைப் பீடத்தின் அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் அவர்களையும் சந்தித்த ஜனாதிபதி, தேரர் அவர்களின் நலன் விசாரித்தார். அனுநாயக்க தேரர் அவர்களுக்காக இலங்கைக் கடற்படையின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுவரும் சங்கவாசக் கட்டிடத்தையும், ஜனாதிபதி பார்வையிட்டார்.

மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கலாநிதி சங்கைக்குரிய நியங்கொட விஜித்த தேரரையும் சந்தித்த ஜனாதிபதி, தேரர் அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன் நாட்டின் தற்போதைய அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து, மகாநாயக்க தேரர்கள் மற்றும் அனுநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி அவர்கள் இதன்போது விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: