கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்துக்கும் அதிகமானோர் கைது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Thursday, June 10th, 2021கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய ஆயிரத்து 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இன்றையதினமும் நாட்டின் பல இடங்களில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுவோரை அடையாளம் காண்பதற்காக ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் போதைப் பொருட்களுடன் கைதாகின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பித்தக்கது.
Related posts:
அத்தியாவசிய பொருட்களின் மீதான வரி அதிகரிக்கப்படவில்லை - நிதி அமைச்சு!
இலவச அம்புலன்ஸ் சேவையில் மேலும் 209 அம்புலன்ஸ் வண்டிகள்!
பொதுமக்களின் நன்மைக்காக நான் வாய்மூலம் பிறப்பிக்கும் உத்தரவுகளை சுற்றுநிரூபங்களாக கருதுங்கள் - ஜனாத...
|
|