கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!

Tuesday, February 13th, 2018

பன்றிக்கு வைத்த கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து பளை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் வடமராட்சி கிழக்கு முள்ளியான் கேவில் தேவரவெளி குளப்பகுதியல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது

பன்றி வேட்டைக்காக பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததிலேயே குறித்த பகுதிக்கு வேட்டைக்குச் சென்ற கேவிலைச் சேர்ந்த வீரகத்தி வசந்தகுமார் (வயது 27) என்ற குடும்பஸ்தரே காயமடைந்தவராவார்.

இச்சம்பவம் தெர்டர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: