கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் மின்சார இணைப்புக்கள் நாடளாவிய ரீதியில் துண்டிப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!
Thursday, January 11th, 2024
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்
இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின் சேவையை பெற்றுக்கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொத்தமாக பத்து இலட்சத்து 64 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணங்களை செலுத்த தவறிய வாடிக்கையாளர்களது மின் இணைப்புக்கள் மட்டுமே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன் - வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன்! (வீடியோ இணைப்பு)
யாழ். பல்கலையின் கலைப் பீட மாணவர்கள் உண்ணாவிரதம்!
மின் பாவனை தொடர்பில் அரச நிறுவனங்களில் புதிய கட்டுப்பாடு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ப...
|
|
|


