கடும் வெப்பம் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!
Friday, March 22nd, 2019கடும் வெப்பம் காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஜீவகடாட்சம் கஜேந்திரன் (வயது-52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் நேற்றுமுன்தினம் கொளுத்தும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலைசெய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
மின் தடைப்பட்ட பகுதிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நடவடிக்கை எடுத்த திலீபன் எம். பி
எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் - இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது - அமைச்ச...
பெப்ரவரி மாத பிற்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு நம்பிக்கை!
|
|