கடும் வெப்பம் – யாழில் ஒருவர் உயிரிழப்பு!
Friday, March 22nd, 2019
கடும் வெப்பம் காரணமாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை குடும்பத்தலைவர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த ஜீவகடாட்சம் கஜேந்திரன் (வயது-52) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
கூலித் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட இவர் நேற்றுமுன்தினம் கொளுத்தும் வெயிலில் கட்டட அமைப்புப் பணியில் வேலைசெய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார்.
அவர் உடனடியாகப் பருத்தித்துறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
Related posts:
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து!
பெற்றோல் - டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது - இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்...
இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூத...
|
|
|


