கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை !

Friday, June 11th, 2021

நாட்டில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் சாதாரண காலநிலை நிலவுமெனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, மத்திய, வட – மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகம் 30முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள வளிமண்டலவியல் திணைக்களம் புத்தளம்முதல் ஹம்பாந்தோட்டைவரை கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக கடல் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தெற்கு நோக்கி காற்று வீசும். இதன்போது காற்றின் வேகம் 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.

இந்நிலையில் காலிமுதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், நீர்கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும் கடலலையின் வேகம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்கள் மற்றும் கடலோடிகள் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: