கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!
Saturday, July 31st, 2021
அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள் நாளைமறுதினம்முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன. எனினும் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இவ்வாண்டில் இதுவரை 92 இந்திய மீனவர்கள் கைது!
மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள் – நம்பிக்கை தெரிவிக்கும் கோட்டபய ராஜபக்ச!
கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன - அதிவிசேட வர்த்தமானியும் வெளி...
|
|
|
நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதில் எந்த மாற்றமும் கிடையாது - திட்டமிட்டபடி கூடும் என சபாநாயகர் அ...
துருக்கியில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கான இலங்கை தூதுவர் அசாந்தி தெரிவிப்பு!
நீதித்துறை அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்படும் சம்பளம் இன்றி வெளிநாட்டு விடுமுறை கோரிக்கைகளை பரிசீலிப்பத...


